search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையெழுத்து இயக்கம்"

    • வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.

    திருப்பூர்: 

    நாடு முழுவதும் இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய 181 என்ற எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா தேவி கலந்து கொண்டு துவக்கி வைத்து கையெழுத்திட்டு, கைரேகை பதிவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.

    • தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
    • மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் மற்றும் எஸ்.ஆர். நகர் பகுதியில் தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.

    மேலும் "தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி" தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், பொருட்கள் வாங்க செல்லும் பொழுது தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை பயன்படுத்த மாட்டேன் நம் நகரின் தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்த நான் ஒத்துழைப்பேன். தூய்மை உறுதிமொழி எனது குப்பை எனது பொறுப்பு, என் நகரம் என் பெருமை. எனது நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும், தூய்மைப்பணிகளுக்கு என்னைஅர்ப்பணித்து கொள்ள, என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்டமாட்டேன், பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்கமாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பேன், தூய்மை நகருக்கான எனது ஆர்வத்தில், என்னை சார்ந்தவர்களும் குறைந்தபட்சம் தினசரி 2 மணி நேரம் பங்கேற்க ஊக்குவிப்பேன்.நகர தூய்மைக்கு பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே ஒரே காரணம் என்பதை நான் நம்புகிறேன், என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது நகரத்தை தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்ற தூய்மை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், உதவி ஆணையாளர் (மண்டலம்) வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில் நடந்தது
    • பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் அணி மாணவர் அணியினர் புதுப்பேட்டை சந்தை பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீ. வடிவேல் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வேளாண் குழு தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சித் பிரதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார் பில் அரசடி ரெயில்வே மைதானம் முன்பு, மக்கள் நிலத்தை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் பல்லாயி ரக்கணக்கான மக்கள் மற்றும் விளையாட்டு வீரர் கள் பயன்படுத்திவரும் பொது சொத்தான மதுரை ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரெயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதில் மாநக ராட்சி துணை மேயர் நாகரா ஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற் றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்ற னர்.

    தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், ரெயில்வே மைதானத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதுரையின் நுரையீரலாக பெரும் மாசுவை தடுத்து நிறுத்தும் ஒரு இடமாக ரெயில்வே மைதானம் உள்ளது. இதை தனியார் கார்ப்பரேட் முத லாளிகளிடம் வழங்கி விட் டால் இப்பகுதியில் சுகாதா ரம் என்பதை பாதுகாக்க முடியாது.

    ஏற்கனவே காற்று மாசு பெருவாரியாக ஏற்பட்டு வரும் நிலையில் காற்றில் மாசினை குறைப்பதற்கு ரெயில்வே காலனி பெரும் பங்கு வகிக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்களை விட இங்கு 50 சதவீதத்திற்கு மேல் மரங்கள் உள்ளது. எனவே மதுரையில் நுரையீ ரலாக இருக்கக்கூடிய ரெயில்வே மைதானத்தை தனி யார் பெரும் முதலாளிக ளுக்கு மத்திய அரசு தாரை வார்க்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று ரெயில்வே மைதானம் பாது காப்பு கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைக்கிறோம் என்றார்.

    • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதே போல் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தி.மு.க. சிறப்பு பேச்சாளர் பங்கேற்று மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு குறித்தும் அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

    மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவும் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. சென்னையில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா ஒரு பள்ளியில் சென்று மாணவர்களிடம் கையெழுத்து பெற்றது சர்ச்சையாகி உள்ளது. இதனால் இப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியே கையெழுத்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்போது ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு 1000 கார்டு வீதம் முதற்கட்டமாக அனுப்பப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இந்த கார்டுகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டலாக பெறப்படும் கையெழுத்துகள் சேலத்தில் டிசம்பரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் அறிவாலயம் வழியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில் நடந்தது.
    • செயலாளர், அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    நிகழ்ச்சியில் நெடுகுளா கிளைக்கழக செயலாளர் மோகன், ஒன்றிய பிரதிநிதி மணி, மாவட்ட விவசாய அணி சுண்டட்டி முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண்குமார், குன்னூர் நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார்
    • காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது

    கோவை,

    ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய தலித் உச்சி மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக நீதி அமைப்புகள் பங்கேற்றன.

    இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி அந்தந்த மாநிலங்களில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உட்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

    • 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது.
    • கையெழுத்து இயக்கத்தை மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், அவைத்தலைவர் கிரகாம்பெல், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அஞ்சல் அட்டையில் பெயர், செல்போன் எண், தங்களது முகவரியை எழுதி கையெழுத்திட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பி னர் இரா.ஆ.பிரபாகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் செல்வ கருணாநிதி, ஜோசப் பெல்சி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், ராதாபுரம் இளைஞரணி விஜயாபதி ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலருமான கே.சம்பத் ராஜா வரவேற் றார்.

    மாவட்ட தி.மு.க. செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. இளை ஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் எம்.ஆசிக் அமீன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிற்படுத் தப்பட்டோர் நலன் மற்றும் கதர் வாரியத்துறை அமைச் சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பி.மெய்யநாதன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    மாநில திட்ட குழு துணைத்தலைவர் ஜெ.ஜெய–ரஞ்சன் கருத்துரை வழங்கி னார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். விளை யாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், ராம நாதபுரம் 31-வது வார்டு கவுன்சிலருமான எம்.முஹம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் எஸ்.ரமேஷ் கண்ணா, சி.கே.குமரகுரு, சன் சம்பத்குமார், ஆர்.எஸ்.சத்தியேந்திரன், ஆர்.கே. கோபிநாத், எஸ்.தௌபீக் ரஹ்மான், மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜி.ஸ்டாலின், என்.பொன் மணி, சங்கர், எம்.வசந்த்,

    ஆர்.சண்முகப்பிரியா,ப.சம்பத்குமார், மருத்துவர் அணி துணை அமைப்பா ளர்கள் தி.சந்திரமோகன் வா.எபினேசர், செல்வராஜ், எம்.எம்.கார்த்திக், பா.சர வணபாலன், வே.சேகர், சி.கணேசன், த.கார்த்திகே யன், ந.மதிவாணன் வ.மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளை ஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஆலோசனையின்படி இன்று மதுரை திருப்பாலை குறிஞ்சி மகாலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக நீட்தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஜனாதிபதிக்கு தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கையெழுத்திட்டனர்

    இந்த கையெழுத்து இயக்கத்திற்கு இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலை மை வகித்தனர். தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் முன்னாள் எம்.பி., கம்பம் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் பால சுப்பிர மணி யன், சோம சுந்தரபாண்டியன், நேரு பாண்டி, சசிகுமார், வீரராக வன், வாடிபட்டி பால் பாண்டி, சிறை செல் வன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வைகை மருது, இளங்கோ, குமரேசன், மற்றும் கவுன் சிலர் ரோகினி பொம்மத் தேவன், பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கல்லூரிக்கு வருவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது
    • வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் இன்று நீட்டுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நாகர்கோவிலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநில நிர்வாகிகள் தாமரை பாரதி, தில்லை செல்வம், பாபு வினி பிரட், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர், மண்டல தலைவர் ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், பிராங்கிளின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் எழுத்தாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வை ஒழிக்க தி.மு.க. போராடி வருகிறது. நீட்டை ஒழிக்கும் நாள் வரலாற்றின் பொன்னாளாகும். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது பாரதிய ஜனதா அரசு தான். அதற்கு துணை நின்றது அ.தி.மு.க. அரசு. தற்போது கவர்னர் அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார். ஆனால் தி.மு.க. போராடி வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. கவர்னரின் கூட்டு சதியால் தான் நீட் வந்துள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்கு தனி கோச்சிங் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.

    நுழைவு தேர்வில் கலந்து கொள்வதற்காக குமரியில் உள்ள மாணவர்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்கு பண செலவு ஆகும். அதற்காக தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். பிளஸ்-2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவிற்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவ கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. கல்வியை வளர்ப்பதற்காக காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார். கலைஞர் கருணாநிதி திருமண உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்பொழுது புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கல்லூரிக்கு வருவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு தகுதியை குறைப்பதற்கான தேர்வாகும். நீட் தேர்வு லஞ்சத்தை ஒழிக்கவில்லை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. டாக்டர்கள் அதிகமான உள்ளார்கள். எனவே பிரதமர் மோடி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போஸ்ட் கார்டில் கையெழுத்திட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.

    • கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
    • பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, நிர்வாகிகள் தங்கராஜ், சசிகுமார், பிலிப், நந்தகுமார், முரளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மொரப்பூர்,

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சுகவனம், கடத்தூர் ஒன்றிய செயலாளர் லியாகத், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் குமரவேல், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, நிர்வாகிகள் தங்கராஜ், சசிகுமார், பிலிப், நந்தகுமார், முரளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×